அயலான் ரிலீசுக்கு முன்பே அடுத்த Sci-fi படம்.. அஸ்திவாரம் போட்ட ரவிக்குமார் - அந்த ஹீரோவும் ஓகே சொல்லிட்டாராம்!
Director Ravikumar Next Movie : பிரபல இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது.
Indru netru naalai
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "இன்று நேற்று நாளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக கால் பதித்தவர் தான் ஆர். ரவிக்குமார். தன் முதல் திரைப்படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு சிறந்த இயக்குனராக உருவெடுத்தவர் ரவிக்குமார் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hkf69rv64d5tce5kd31gbj5p/ayalaan_300x171xt.jpg)
Ayalaan
இதற்கு முன்னதாக தமிழ் திரை உலகில் பல சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் "இன்று நேற்று நாளை" திரைப்படத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது. அதற்கு ரவிக்குமாரின் மிக மிக நேர்த்தியான இயக்கம் ஒரு காரணம். இந்நிலையில் சுமார் 8 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் அவரது இரண்டாவது திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாக உள்ளது.
Ayalaan Release
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இந்திய திரை உலகமே இதுவரை பார்த்திராத அளவிற்கு நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது அயலான் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அப்பட ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குனர் ரவிக்குமார் பிரபல ஹீரோ ஒருவருக்கு ஒரு சயின்ஸ் வெப்சன் கதையை கூறியிருப்பதாகவும் அவரும் சரியான நேரம் வரும் பொழுது அதில் கட்டாயம் நடிக்கின்றேன் என்று கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Actor Suriya
அந்த நடிகர் வேறு யாரும் அல்ல பிரபல நடிகர் சூர்யா அவர்கள் தான், ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சூர்யாவிற்கு "இரும்பு கை மாயாவி" என்கின்ற ஒரு கதையை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரவிக்குமார் அவர்கள் நடிகர் சூர்யா அவர்களை வைத்து ஒரு சயின்ஸ் எக்ஸிபிஷன் திரைப்படத்தை விரைவில் இயக்கவிருக்கிறார்.
மிஸ் யூ கேப்டன்... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய ஜெயம்ரவி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எஸ்.ஏ.சி