ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மாவீரன்... வைரலாகும் சிவகார்த்திகேயனின் ரீசண்ட் கிளிக்
நடிகர் சிவகார்த்திகேயன் நரிக்குறவர்களின் குடும்பத்தினருடன் புன்னகையோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
sivakarthikeyan
சின்னத்திரை இருந்து சினிமாவுக்கு வந்து, தற்போது அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். கடந்த மாதம் திரைக்கு வந்த இவரின் மாவீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மாவீரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் எஸ்.கே.21 திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவா. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Maaveeran sivakarthikeyan
எஸ்.கே.21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த எஸ்.கே.21 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன் தன்னுடைய திருமண நாளை கொண்டாடியதோடு, கவினின் திருமண வரவேற்பிலும் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... ஜெயிலரில் கேமியோ ரோலில் நடிக்கவே ரூ.4 கோடி சம்பளம் வாங்கிய ஷிவாண்ணாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
sivakarthikeyan viral photo
சிவகார்த்திகேயனின் திருமண நாள் புகைப்படம், கவினின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியானாலும், அதனை மிஞ்சும் அளவுக்கு அவரின் ஒரு புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நரிக்குறவர்களின் பேமிலியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆக்கிரமித்து உள்ளது.
Actor sivakarthikeyan
அதில் சிவகார்த்திகேயனை பார்த்த பூரிப்பில் அவரை கட்டியணத்தபடி போஸ் கொடுக்க நரிக்குறவ குடும்பப் பெண் அதனை செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுள்ளார் சிவகார்த்திகேயன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ உயரங்கள் பல தொட்டாலும், இன்னும் எளிமையோடு வாழும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கொரோனா குமார் படத்தில் நடிக்க காசு வாங்கிட்டு டிமிக்கி கொடுத்த சிம்பு... அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்