Siragadikka Aasai: முத்துவை காப்பாற்ற பாருக்கு செல்லும் மீனா.! செம்ம ட்விஸ்ட்... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிறகடிக்க ஆசை சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
Siragadikka Aasai Serial:
சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு TRP-யில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் 'சிறகடிக்க ஆசை'. ஒரு கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை... இளம் ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் காட்சிகளோடு விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் இயக்குனர்.
Roghini and Manoj Money Problem
கடந்த வாரம், ரோகிணியும் - மனோஜும் ஜீவாவிடம் இழந்த பணத்தை மீட்பார்களா? என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது சிட்டியின் சதி வலையில் சிக்கி முத்து அவதிப்படும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
Muthu car ceased
முத்து குடித்து விட்டு, கஸ்டமரை காரில் ஏற்றி செல்கிறார் என... திட்டம் போட்டு ஒரு பொய்யான வீடியோயோவை வெளியிட, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து... முத்துவின் காரை போலீசார் எடுத்து சென்று விடுகின்றனர். அண்ணாமலையும் உண்மை தெரியாமல் முத்துவை அடித்து அசிங்கப்படுத்த... மனோஜிக்கும், ரோகிணிக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.
Meena Knows Truth
மீனாவும் முத்த குடித்தார் என நம்பி அவரை கண்டபடி திட்டி விடுகிறார். பின்னர் முத்து 12 மணிக்கு குடிக்க மாட்டார் என்பதும், இதில் யாருடைய சதியோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு... முத்துவை காப்பாற்ற பாருக்கு சென்று, ஓனரிடம் அனுமதி வாங்கி CCTV காட்சியை பார்க்கிறார். அதில் முத்து குடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
Emotinal Moment
பின்னர் காவல் நிலையத்திற்கு அந்த காட்சிகளுடன் வந்து தன்னுடைய கணவர் ஒரு நிரபராதி என்பதை மீனா நிரூபிக்க, தன்னுடைய கணவரை தவறாக நினைத்ததை எண்ணி முத்துவை கட்டிப்பிடித்து அழும் காட்சி தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளது.