படங்களில் நடிக்காமலே ஆண்ட்ரியாவுக்கு எப்படி இத்தனை கோடி சொத்து.. சுசித்ரா சொன்ன சீக்ரெட்..
பாடகி சுசித்ரா தற்போது ஆண்ட்ரியா குறித்தும் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnfcg3c50c0c94d3sbkcd8r0/2-jpg_300x357xt.jpg)
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் கேமியோ ரோல், செகண்ட் ஹீரோயின் என தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார்.
சுந்தர் சியின் அரண்மனை படத்திற்கு பின் சொல்லிக்கொள்ளும் படி எந்த படத்திலும் அவர் நடிக்க வில்லை. எனினும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், சில ஆண்டுகளாகவே அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
பல சர்ச்சைகளில் சிக்கியதாலேயே ஆண்ட்ரியாவின் கெரியர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சில பிரபலங்களின் போட்டோக்களை வெளியிட்டார்.
அதில் தன்னுடன் வயதில் குறைந்த அனிருத் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் பாடுவதன் மூலம் ஆண்ட்ரியா கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா தற்போது தனுஷ், ஐஸ்வர்யா, விஜய், த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து பேசி வரும் நிலையில் ஆண்ட்ரியா குறித்தும் பேசி உள்ளார்.
ஆண்ட்ரியாவிடம் நீங்கள் நினைப்பதை விட 200 அல்லது 300 மடங்கு சொத்து இருப்பதாகவும், அவரிடம் 200 வைர நகைகள் இருப்பதாகவும் அவர் பேசி உள்ளார்.
இந்த வைர நகை எல்லா எப்படி கிடைத்து என்று கேட்ட அவர், ஆண்ட்ரியா வீட்டை சோதனை செய்தால் அவருடன் தொடர்பில் இருந்த பலர் சிக்குவார்கள் என்று சுசித்ரா கூறியுள்ளார். மேலும் ஆண்ட்ரியாவிடம் மினி கூப்பர் கார் இருக்கிறது என்றும், இதெல்லாம் அவருக்கு எப்படி வந்தது என்றும் சுசித்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.