குழந்தைக்கு அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சி நடத்திய பிரபல சீரியல் நடிகை.. க்யூட் போட்டோஸ்..
சீரியல் நடிகை நட்சத்திரா - விஸ்வா தம்பதி தங்கள் மகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டும் நிகழ்ச்சியான அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நட்சத்திரா தமிழில் ‘ கிடாரி பூசாரி மகுடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளும் பெரிதாக அமையவில்லை.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hmx3kvdfjqsh292syxyqfp1a/snapinsta-app-305940111-1374859307253222-5858731899436848965-n-1080_300x375xt.jpg)
ஆனால் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி சீரியலில் அறிமுகமான நட்சத்திரா மிகவும் பிரபலமானர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவருக்கு சீரியல்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் டாட்டூ ஆர்டிஸ்ட் விஸ்வா சாம் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார் நட்சத்திரா.
எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நடந்த இந்த திடீர் திருமணம் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தான் கர்ப்பமான செய்தியை அறிவித்த நட்சத்திரா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நட்சத்திரா – விஸ்வா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளுக்கு இதழ் என்று பெயரிட்டுள்ளனர்.
எனினும் தனது தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவசரமாக திருமணம் செய்ய வேண்டி இருந்தது என்றும் இதனால் யாரையும் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லை எனவும் நட்சத்திரா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த தம்பதி தங்கள் மகளுக்கு முதன்முறையாக உணவு ஊட்டும் நிகழ்ச்சியான அன்ன பிரச்சன்னம் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.