ஜானகியின் பிறந்தநாள்.. யாருடன் சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் தெரியுமா மாயா? சந்தியா ராகம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தனாவுக்கு கார்த்திக் போனை கிப்ட்டாக கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சீனு மொட்டை மாடியில் இருக்க மாயா அவனிடம் பேச வர சீனு பேச மறுத்து கோப்படுகிறான். உன்னை போய் காதலித்து என் மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டேன் பாரு என்ன சொல்லணும் என்று கோபப்படுகிறான். இதனால் மாயா அவன் மனசுல இருக்கிறதை சொன்னான், அதுக்கு ஓவராக ரியாக்ட் பண்ணிட்டோமோ என்று வருத்தப்படுகிறான்.
இதனை தொடர்ந்து தனம் இருவரையும் கூப்பிட்டு நாளைக்கு அம்மாவுக்கு பிறந்த நாள் என்ற விஷயத்தை சொல்ல எல்லாரும் ஒன்று சேர்ந்து ஜானகியை சர்ப்ரைஸ் செய்ய பிளான் போடுகின்றனர். நடு இரவில் பிறந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வீட்டில் பவரை ஆப் செய்து ரோட்டில் பட்டாசை வெடிக்க அதை பார்த்து அதை பார்த்து அனைவரும் பதறி போய் ஹாலுக்கு வருகின்றனர்.
சீனு மீண்டும் மெயினை ஆன் பண்ண மாயா தனம் சீனு அங்கிருப்பதை பார்த்து இந்த மாதிரி வேலையெல்லாம் மாயா தான் செய்திருப்பா என்று அவளை திட்ட மாயா இன்னைக்கு ஜானகி பெரியம்மாவோட பிறந்தநாள் அதனை கொண்டாட தான் இந்த ஏற்பாடு என்று சொன்னதும் எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.
ஜானகியை கேக் கட் பண்ண சொல்ல அவன் ரகுராம் அனுமதியை எதிர்நோக்கி காத்திருக்க அவரும் கேக் கட் பண்ண சொன்னதும் சந்தோசமாக கேக் வெட்டுகிறாள். பிறகு மாயா ஜானகியும் சந்தியாவும் ஒன்றாக இருக்கும் போட்டோவை கிப்ட்டாக கொடுக்க ஜானகி எமோஷனலாகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.