உங்கள் திருமண உறவு மகிழ்ச்சியாக இல்லை என்பதை குறிக்கும் அறிகுறிகள் இவை தான்.. தம்பதிகளே நோட் பண்ணுங்க..
உங்கள் திருமண உறவு மகிழ்ச்சியாக இல்லை என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் திருமண உறவு மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இல்லை என்பதை குறிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளை அங்கீகரிப்பது உறவைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதது. ஏனெனில் இந்த அறிகுறிகளை புறக்கணித்தால் அது உறவில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒருவர் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத உறவில் உள்ள எச்சரிக்கை அறிகுறிகளை பற்றி இந்த பார்க்கலாம்.
உங்கள் துணை உங்கள் செயல்களை அல்லது நடத்தைகளை கட்டுப்படுத்தினால் மேலும் அவர்கள் உங்கள் விருப்பங்களை ஆணையிட முயற்சி செய்கிறார்கள். மேலும் அவர்கள் தொடர்ந்து உங்கள் முடிவுகளை பாதிக்கும் நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். உங்கள் துணை அதிகமாக கட்டுப்படுத்தும் நடத்தையை வெளிப்படுத்தினால் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
உறவில் உங்கள் துணை உங்களுக்கு உணர்வுபூர்வ ஆதரவை கொடுக்கவில்லை என்றால் அது உறவில் சிவப்புக் கொடியின் அறிகுறியாகும். அவர் உங்கள் உணர்ச்சி மற்றும் உடல் தேவைகளை கவனிப்பதில்லை என்று அர்த்தம். இந்த வகையான நடத்தை ஒரு நபரை உறவில் தனது துணையிடம் உணர்ச்சியற்றவராக ஆக்குகிறது. இது உங்கள் உறவு மகிழ்ச்சியாக இல்லை என்பதை குறிக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும்.
எந்த உறவுக்கும் நம்பிக்கையே அடித்தளமாக அமைகிறது. திருமண உறவில் நம்பிக்கையின்மை உறவில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். நம்பிக்கை இல்லாத போது, அது உங்கள் துணை மீது சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை வளர்க்கிறது. தம்பதிகள் இருவரும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அது உறவில் நம்பிக்கையின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக மாறும்.
நீங்களும் உங்கள் துணையும் சரியாக பேசிக்கொள்ளவில்லை என்றால் உறவில் வெறுப்பை ஏற்படுத்தும். தகவல்தொடர்பு முறிவு ஏற்பட்டால், அது உறவில் நெருக்கம் மற்றும் தவறான புரிதல் இல்லாமைக்கு வழிவகுக்கிறது. தொடர்பு இல்லாதது உறவில் கசப்பை ஏற்படுத்தும்.
உங்கள் துணை தொடர்ந்து உங்கள் உணர்வுகளை நிராகரித்து, வாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை இழிவுபடுத்த முயற்சித்தால், அது ஆரோக்கியமான உறவு அல்ல. அது அவமரியாதையின் அறிகுறியாகும்
தீர்க்கப்படாத கடந்த கால பிரச்சினைகள் உறவில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். கடந்த கால உறவுகள் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் பிணைப்பில் ஒரு தடையை உருவாக்குகிறது.
உங்கள் துணையின் தொடர்ச்சியான விமர்சனங்கள் உணர்ச்சி ரீதியாக உங்களை தொந்தரவு செய்யலாம். உங்கள் துணையிடம் இருந்து தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்வது உறவில் எச்சரிக்கை அறிகுறியாகும். உங்கள் துணையிடமிருந்து தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்வது உங்கள் சுயமரியாதையை உடைக்கும்.