School Teachers: 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.. என்ன காரணம் தெரியுமா?
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் பரிந்துரைத்துள்ளது.
Public Exam
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவர்களின் விடைத்தாள்களை சரியாகத் திருத்த வேண்டும் என அந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அரசுத் தேர்வுத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் வெளியான பின்னர் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்கள் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.
Exam Paper Correction
இதனால் மாணவர்கள் பலர் தங்களின் விடைத்தாள்களை, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, மதிப்பெண்ணில் மாற்றங்களும் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணியில், ஆசியர்கள் சிலர் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும், திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Tamilnadu School Education
இந்நிலையில், கடந்த ஆண்டு கடந்த பொதுத்தேர்வில் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு தேர்வுத்துறை இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களை இந்தாண்டு பொதுத் தேர்வுகளை கண்காணிப்பது, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட எந்த பணிகளிலும் இந்த ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.