தீர்த்தம் கொடுத்து ஆசையை தீர்த்த கோவில் பூசாரி! அவரை போலீஸ் இன்னும் கைது செய்யாததால் பெண் எடுத்த அதிரடி முடிவு
சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Chennai Kalikambal Temple Priest
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் கடந்த 13ம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxyqjbqsbz6wpcv5p72pybzd/untitled-design--7-_300x300xt.jpg)
Chennai High Court
மேலும் கார்த்திக் முனுசாமி வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தீர்த்தம்னு சொல்லி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்! பிரபல கோயில் பூசாரி மீது நடிகை புகார்! சென்னையில் பகீர்!
CBCID
அதில், புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ அல்லது அவரிடம் விசாரணை நடத்தவோ? இல்லை எனவும் கூறியுள்ளார். காவல் துறையினர் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும், அதனால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.