பிரபல தனியார் கல்லூரியில் சரக்கு அடிக்க பணம் கேட்ட சீனியர்கள்! கொடுக்க மறுத்த ஜூனியர்! மொட்டை அடித்து ராகிங்!
கோவையில் பிரபல தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்களிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய பிறகு கல்லூரியில் பயின்று வந்த சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
ராகிங்கை தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கோவையில் பிரபல தனியார் கல்லூரியில் மொட்டை அடித்து ராகிங் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.