புரட்சி பாரதம் கட்சியின் முக்கிய பிரமுகர் வெட்டி படுகொலை.. இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல்.!
புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் என்பவர் கஞ்சா போதை கும்பலால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள தாழவேடு கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் வசிப்பவர் மோகன் அசோக்குமார் (37). இவர் திருவலங்காடு ஒன்றியம் புரட்சி பாரத கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் அசோக்குமார் பேசிக்கொண்டிருந்த திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சராமரியாக வெட்டினர். மேலும் இதனை தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் (35) என்வரையும் வெட்டிவிட்டு தப்பித்தனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h8gm4sn3qhb7dr6b4y2437tf/chennai-police-3_300x169xt.jpg)
ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு அசோக் தகவல் கொடுத்ததாலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, அசோக்குமாரை கொலை செய்த மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
விசாரணையில், தாழவேடு காலனியைச் சேர்ந்த மனோ என்கிற மனோபாலன் (23) சின்னா என்கிற அருண்குமார் (21), விமல் (20) என தெரிய வந்தது. கஞ்சா போதையில் அசோக்குமாரை வெட்டிக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.