55 வயதுக்குள் கோடீஸ்வரராகலாம்.. அரசின் இந்த திட்டத்தில் மாதம் ரூ.7500 முதலீடு செய்தால் போதும்..
பிபிஎஃப் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே உத்தரவாத வருமானம் மற்றும், பாதுகாப்பான முதலீடு தேவை என்று நினைபப்வர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உதவியாக இருக்கும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hqr8rfm6my1zfnxxmefwb4sy/ppf-4-1709137739398_300x181xt.jpg)
மத்திய அரசு தபால் நிலையங்கள் பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF). இந்த பிபிஎஃப் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ppf
இந்த பிபிஎஃப் திட்டத்தில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ரூ. 500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் முதிர்வு காலத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு, இந்த திட்டத்தை நீட்டிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் முன்கூட்டிய திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. அதே போல் இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது. எனினும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான முதலீட்டை முடித்த பின்னரே முதலீட்டாளர்கள் 3வது நிதியாண்டிலிருந்து கடன் வசதியையும் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டு முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.1 கோடி பெறலாம். உதாரணமாக ஒருவர் தனது 30-வது வயதில் பிபிஎஃப் திட்டத்தில் ரூ 12,500 மாதாந்திர முதலீடு செய்ய தொடங்கினால், 7.1% வருடாந்திர வட்டி என்ற அளவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த தொகை ரூ.66.58 லட்சமாக வளர்கிறது. மேலும் 5 ஆண்டுகள் இந்த திட்டத்தை நீட்டித்து 55 வயதிற்குள் ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை பெறலாம்.
ppf 3.jpg
அதே போல் ஒரு தனது 25 வது வயதில் மாதம் ரூ. 10000 அதாவது ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சத்துடன் தனது முதலீட்டை தொடங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.1% வருடாந்திர வட்டி என்ற அளவில் அவரின் மொத்த முதலீடு 53.27 லட்சத்தை எட்டுகிறது. 5 ஆண்டுகள் என்ற 2 முறை இந்த திட்டத்தை நீட்டித்தால், 55 வயதிற்குள் ரூ. 1 கோடிக்கு மேல் அடையலாம்.
ஒரு நபர் தனது 20-வது வயதில் மாதம் ரூ 7,500 என ஆண்டுக்கு ரூ. 90,000 முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அதே போல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 7.1% வருடாந்திர வட்டி என்ற அளவில் அவரின் மொத்த முதலீடு 39.50 லட்சமாக இருக்கும். 5 ஆண்டுகள் என இந்த திட்டத்தை அடுத்தடுத்து நீட்டிக்கும் போது 55 வயதிற்குள் ரூ. 1 கோடியைத் தாண்டும்.
இந்த திட்டத்தில் கூட்டு வட்டியின் மூலம், வட்டித்தொகை முதலீட்டை விட அதிகமாக இருக்கும். இது பணத்தை பன்மடங்காக உயர்த்தி 55 வயதில் உங்களை கோடீஸ்வரராக்க உதவுகிறது. மேலும் இந்த பிபிஎஃப் திட்டத்தில் வருமான வரி விலக்கினையும் பெறலாம்.
வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் இந்த திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.