சும்மா Game of Thrones மாதிரி இருக்கும்.. சலார் 2 பற்றி பேசிய தயாரிப்பாளர் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
Salaar Part 2 : சுமார் 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் சலார் பாகம் ஒன்று. இந்த படம் தற்போது வரை உலக அளவில் 600 கோடி வசூலை எட்டப்போகிறது.
Salaar 1
கன்னட மொழியில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்ற இயக்குனராக மாறியவர்தான் பிரஷாந்த் நீல். இவருடைய இயக்கத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள துறையில் முன்னணி நடிகராக விளங்கி வரும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கனவில் வெளியான திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரும் சேவை சந்தித்தாலும், வசூல் ரீதியாக தற்பொழுது உலக அளவில் சுமார் 600 கோடியை எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... செம்ம வெயிட்டு பார்ட்டியா இருக்காரேப்பா..!
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hka2n3tnstm2btzn1kpvfsda/prabhas_300x171xt.jpg)
Prabhas
கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய சருக்கல்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார் பிரபாஸ் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாகோ, ராதே சியாம் மற்றும் ஆதிபுருஷ் போன்ற படங்கள் ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் திரைப்படமாக அமையவில்லை. அந்த வகையில் சலார் திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகள் மட்டுமே நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் திரைக்கதையில் பெரிய அளவிலான தொய்வு இருந்து வருகிறது என்றும் ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.
Prithviraj Sukumaran
இந்நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும், அதேபோல இந்த முதல் பாகம் என்பது வெறும் கிலிம்ப்ஸ் காட்சி தான் என்றும், சலார் படத்தின் இரண்டாம் பாகம் "Game of the Thrones" போல பிரமாண்டமாக அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் அவர்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் முதல் பாதியிலேயே எங்களுக்கு பெரிய அளவில் போர் அடித்து விட்டது, இரண்டாவது பாகம் எப்படி இருக்க போகிறது என்று பயத்தோடு தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிவருகின்றனர்.
Salaar Movie Producer
சலார் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்றாலும், பிரபாஸ் ரசிகர்களை இந்த படம் திருப்திபடுத்தியுள்ளது என்றே கூறலாம். கேஜிஎப் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக கதை அம்சத்தை கொடுத்த பிரசாந்த், சலார் இரண்டாம் பாகத்திலாவது அதே வேகத்துடன் பணியாற்றுவர் என்று எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஜய் மீது செருப்பு வீச்சு... உடனடியா ஆக்ஷன் எடுங்க - கோயம்பேடு காவல்நிலையத்துக்கு பறந்த புகார்