PM Kisan Yojana: விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துடுச்சா பாருங்க..!
பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற மறுநாளே பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17வது தவணை பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.
PM Kisan Yojana
பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க துவங்கப்பட்ட திட்டமாகும். மத்திய அரசின் இந்தத் திட்டம் 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம் மொத்தமாக ரூ.6,000 விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகிறது. இத்திட்டமானது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
PM Modi
கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் 16வது தவணை பணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி 3வது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து ஜூன் 9ஆம் தேதி மாலை பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஜூன் 10ம் தேதி மோடி 3.0 அரசின் முதல் நாளிலேயே விவசாயிகளுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Farmers
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17ஆவது தவணை விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வெளியிட்டார். அரசின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.