நடிகை பவித்ரா விபத்தில் சாகவில்லை! தற்கொலைக்கும் முன் சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருடன் நடித்த சக நடிகர் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்கு முன் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பவித்ரா ஜெயராம் ஏராளமான தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தற்போது 'திரிநயனி' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' சீரியலின் தெலுங்கு வெர்ஷன் ஆகும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hxxse3jymghshjdw3vvfq9yr/437736496-18311397385181245-6853102873302333068-n-jpg_300x375xt.jpg)
Pavithra Jayaram
தமிழில் மாரி சீரியலில் நடித்து வரும் ஆஷிகா படுகோன் தான், தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் பவித்ரா ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் சந்திரகாந்த் என்பவரும் நடித்து வருகிறார். சந்திரகாந்த் சக நடிகர் என்பதைத் தாண்டி, பவித்ராவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
ஆட்டோ ட்ரைவால் கண்ணீர் மயமான அரங்கம்! சர்ப்ரைஸ் கொடுத்த நடுவர்கள் - சரிகமப வேற லெவல் சம்பவங்கள்!
pavithra jayaram
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பவித்ரா ஜெயராம் மற்றும் சந்திரகாந்த் உள்ளிட்ட நான்கு பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் பவித்ரா ஜெயராமுடன் சீரியலில் நடித்து வந்த சந்திரகாந்த் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் இவர் தற்கொலைக்கு முன்பு கதறி அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் நாங்கள் நான்கு பேர் இருந்தோம். ஹைதராபாத் நோக்கி நாங்கள் பயணித்த கார் சென்று கொண்டிருந்தது. மதியம் 2:30 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம். மாலை 6:30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நாங்கள் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதன் பிறகு 80 அடி சாலையில் சென்றோம். பஸ் ஒன்றை எங்களுடைய கார் ஓவர் டேக் செய்ய முயன்ற போது பஸ் உரசியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பெரிதாக எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை அதேபோல் இந்த விபத்தினால் பவித்ரா இறந்ததாக சொல்லப்படுவதும் உண்மை அல்ல.
Siddharth 40: சித்தார்த்தின் 40-ஆவது படத்தை இயக்கும் '8 தோட்டாக்கள்' பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ்!
Pavithra Jayaram
இந்த விபத்தில் என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனை பார்த்த பவித்ரா திடீரென அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பே, அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Pavithra Jayaram
மருத்துவர்கள் இது அதிர்ச்சியினால் வரும் ஸ்ட்ரோக் என கூறினார்கள். பவித்ரா உயிரிழந்தது என்னை மனதளவில் மிகவும் பாதிக்க செய்துவிட்டது. அவருடைய இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என சந்திரகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடீயோவை வெளியிட்ட பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சந்திரகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.