ஷாக்கிங் நியூஸ்.. இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் சென்னை திரும்ப சுமார் 1 லட்சம் பேர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருப்பதாகவும், ஆனால் கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன.
ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு அதிக கட்டண வசூல் செய்ததாக சிறைப்பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள இந்த திடீர் அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், வேலைநிறுத்தம் செய்யப்போவதாகத் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் அறிவிப்பு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.