பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் கழுத்தை அறுத்து படுகொலை... 17 வயது கொடூர சிறுவன் சிக்கினான்.. நடந்தது என்ன?
காதல் விவகாரத்தில் சந்தியா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திருப்பணிகரைசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 3வது மகள் சந்தியா(18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுத்து வர குடோனுக்கு சந்தியா சென்றுள்ளார்.
குடோனுக்கு சென்ற சந்திரா நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதனையடுத்து, சந்தேகமடைந்து அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சந்தியா உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இறுதியில் காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
ல முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் இளைஞரும் சந்தியாவும் காதலித்து வந்ததாகவும், பின்னர் காதலை கைவிட்டு அவருடன் பேசுவதையும் நிறுத்தியதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் குடோனுக்கு சென்றதை நோட்டமிட்ட அந்த இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்று பேச முயற்சித்துள்ளார். ஆனால், சந்தியா பேச மறுத்ததை அடுத்து அவரை குத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த 17 வயது சிறுவன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.