இப்பகூட பிசினஸுக்கு தான் முக்கியத்துவமா? வெள்ள நிவாரண உதவி வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!
சென்னையில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கிய நடிகை நயன்தாராவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Nayanthara Femi9
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது தமிழ்நாடு தான். தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார் நயன்தாரா. இன்று தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hh143n652caa9hyhvnfsyasr/new-project---2023-12-07t082042-073_300x364xt.jpg)
Nayanthara Flood relief
இந்த ஆண்டே மூன்று தொழில்களில் முதலீடு செய்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். முதலில் 9ஸ்கின் என்கிற அழகுசாதன பொருட்கள் சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கிய அவர், அதன்பின்னர் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அவர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் டிவைன் புட்ஸ் என்கிற நிறுவனத்திலும் பங்குதாரராக இணைந்தார். இதையடுத்து அண்மையில் பெமி9 என்கிற நாப்கின் பிராண்டையும் தொடங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Nayanthara's Femi9 Flood Relief
அதன்மூலம் சானிட்டரி நாப்கின்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தத்தளிக்கும் மக்களுக்கு தன்னுடைய பெமி9 கம்பெனி மூலம் உதவிக்கரம் நீட்டி உள்ளார் நயன்தாரா. அந்நிறுவனத்தின் சென்னை வேளச்சேரியில் உணவு, குடிநீர் மற்றும் நாப்கின்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினர்.
Nayanthara in controversy
இப்படி மக்களுக்காக ஓடோடி வந்து உதவியும், நயன்தாரா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு காரணம் அதை தன்னுடைய பெமி9 நாப்கின் பிராண்டை பிரபலப்படுத்தும் விளம்பரமாக பயன்படுத்தியது தான். இந்த நிவாரண பொருட்கள் வழங்கியதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் இறுதியாக பெண்கள் சிலரை கும்பலாக நிற்க வைத்து அவர்களிடம் நாப்கினை கொடுத்து, வீடியோ எடுத்துள்ளதோடு பெண்களின் தேவை பெமி9 என டிவி விளம்பரம் போல் அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த நேரத்தில் கூட பிசினஸுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பீர்களா என விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் என்ன ஆச்சு... இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என திடீரென அறிவித்த விஜய் டிவி - காரணம் இதுதான்