குட்நியூஸ்.. வரும் 8ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
வரும் 8ம் தேதி தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Muthumariamman Temple
புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 31ம் தேதி முதல் வரும் 9ம் தேதி வரை பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
School Holiday
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 13-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும், சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
Exam
கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. அத்தியாவசிய பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.
இதையும் படிங்க: Public Holiday: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பொதுவிடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
Government Employee
மேலும் உள்ளூர் விடுமுறை நாளான 8-ம் தேதி திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.