நிக்ஜாம் புயல் எதிரொலி : சென்னையில் ரவுண்ட் கட்டி நலத்திட்ட உதவிகள் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் உதயநிதி பல உதவிகளை செய்து வருகிறார்.
தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி. மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgx0y65fnmh6q3bz3349d1as/asianet-news---2023-12-05t181424-531_300x169xt.jpg)
புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது.
இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனிடையே செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
வேளச்சேரியில் அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்புகளை சந்தித்த பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
பெருங்குடியில் கல்லுக்குட்டை பகுதியில் அவதிக்குள்ளான 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி - பிரட் போன்ற உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வரலாறு காணாத கன மழையைத் தொடர்ந்து, வேளச்சேரி ஏரியின் உபரிநீர் வெளியேறத் தடையாக அதன் அருகில் உள்ள கால்வாயில் மழை நீரால் அடித்து வரப்பட்ட குப்பைகள் தேங்கியுள்ளன.
அவற்றை அகற்றும் பணியை இன்று நேரில் ஆய்வு செய்தோம். மேலும், அப்பகுதியில், மழை, வெள்ளத்தால் பாதிப்புகளை சந்தித்த பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி, கழக அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்று நம்பிக்கையூட்டினோம்” என்று பதிவிட்டுள்ளார்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா