இப்படி ஒரு அடிபொலியான சீனை மிஸ் பண்ணிருக்காங்களே... மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் மறைத்த உண்மை
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்தின் அடிபொலியான சீன் ஒன்றை எடுக்க தவறியதாக இயக்குனர் சிதம்ரம் கூறி இருக்கிறார்.
manjummel boys director chidambaram
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த மஞ்சும்மல் பாய்ஸ். தமிழ்நாட்டில் நடந்த சம்பவத்தை வைத்து எடுத்துள்ளதால் இப்படத்தை தமிழ் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Manjummel boys
சுமார் மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாட்டை பயன்படுத்திய விதமும் அதற்கான காட்சியமைப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும் கமல்ஹாசனின் குணா படத்தை மீண்டும் கொண்டாட வைத்துள்ளது இந்த மஞ்சும்மல் பாய்ஸ்.
Manjummel boys director
கேரளாவின் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் ஒன்றாக கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது குணா குகையில் உள்ள குழியில் நண்பர் ஒருவர் சிக்கிக் கொள்கிறார். அவரை எப்படி சக நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. அந்த குழியில் விழுந்த ஒருவர் கூட உயிருடன் வந்ததில்லை. ஆனால் சுபாஷ் மட்டும் எப்படி உயிர் பிளைத்தார் என்பது தான் அப்படத்தை பார்த்த பலரும் வியந்து பார்த்த விஷயம்.
இதையும் படியுங்கள்... எனக்கு எந்த சம்பந்தமும் இல்லப்பா.. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ் தான்! மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
director chidambaram
சுபாஷ் உயிர் பிளைத்ததற்கு முக்கிய காரணமே அவர் அணிந்திருந்த பெல்ட் தானாம். உள்ளே விழுந்த சுபாஷ், ஒரு பாறையின் விழிம்பில் கிடக்கும் படி படத்தில் காட்டி இருப்பார்கள். ஆனால் அவர் அப்படி விழிம்பில் இருந்தும் கிழே விழாமல் இருந்ததற்கு காரணம் அவர் அணிருந்திருந்த பெல்ட், அங்கிருந்த பாறையில் சிக்கி, அவரை காப்பாற்றி இருக்கிறது. ஆனால் அந்த சீனை படத்தை மிஸ் பண்ணிவிட்டேன் என இயக்குனர் சிதம்பரம் பேட்டியில் கூறி இருக்கிறார்.
Manjummel boys movie missed Scene
சுபாஷ் டூர் கிளம்பும் போது தனது தம்பியின் பெல்ட்டை பிடுங்கி செல்வார். அந்த பெல்ட் தான் அவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. குழியில் மிகவும் இருட்டாக இருக்கும் என்பதால் அந்த காட்சியை தன்னால் எடுக்க முடியாமல் போனதாக சிதம்பரம் கூறி இருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள், இப்படி ஒரு அடிபொலியான சீனை மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பட்ஜெட் 5 கோடி.. ஆனால் வசூல்? பல மடங்கு லாபத்துடன் மாஸ் காட்டும் Manjummel Boys - லாபம் எத்தனை கோடி தெரியுமா?