Local Holiday: 25ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sri Varatharaja Kaliyuga Perumal
தென்னகத்தின் சின்ன திருப்பதி' என அழைக்கப்படும் அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில். இக்கோவிலில் தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகிற 25ம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hvn9xdakjw2c38zma32kg57b/ariyalur-1_300x169xt.jpg)
Ariyalur district collector
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பில்: அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகிற 25ம் தேதி வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செம்ம ஹாப்பி நியூஸ்! ஏப்ரல் 23ம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?
Exam
கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மேலும் 25ம் தேதியன்று மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 4ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.