Suriya 41 Movie update: சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா...பாலாவுடன் ஏற்பட்ட மனகசப்பு தான் காரணமா..?
Suriya 41 Movie update: நீண்ட வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
suriya 41
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்து வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இருப்பினும், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.
suriya 41
இதையடுத்து, கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
suriya 41
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
suriya 41
''சூர்யா 41'' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் துவங்கி நடைபெற்று வந்தது. ஜுலை மாதத்திற்குள் சூர்யா 41 படத்தை முடித்து விட்டு, அடுத்து வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
suriya 41
முன்னதாக, சூர்யா மும்பை புறப்பட்டு சென்றதால், பாலா - சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷுட்டிங்கில் இருந்து சூர்யா பாதியிலேயே கோபமாக கிளம்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் சில மனகசப்பு ஏற்பட படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மொத்தமாகவே படம் டிராப் ஆனது என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
bala suriya
பாலா இயக்கிய படம் கைவிடப்பட்டதால் சூர்யா 41 படத்தை சிறுத்தை சிவாவிடம் இயக்க சொல்லி விட்டாராம் சூர்யா. ஆனால் சூர்யா தரப்பில் இப்போதைக்கு சின்ன இடைவேளை தான், பட கதையில் சில மாற்றங்கள் நடந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.