கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான தாய்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமியை தாயே கழுத்தை நெரித்து துதடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
illegal love
கர்நாடகா மாநிலம் தார்வார் டவுன் கமலாபுரா கூகார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (26). இவருக்கு திருமணமாகி 5 வயதில் மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். ஜோதியின் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜோதிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
karnataka Crime News
மேலும் கணவர் இல்லாத நேரத்தில் ராகுல் வீட்டிற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமா இருந்து வந்தனர். ஆனால், இதற்கு மகள் இடையூறாக இருந்து வந்துள்ளார். இதனால், மாற்றுத்திறனாளி மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதியின் கணவர் வெளியூர் சென்றதால் ராகுலை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார்.
Child baby murder
பின்னர் ராகுல், ஜோதி ஆகியோர் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது சகானா தொடர்ந்து அழுதுள்ளாள். இதனால் ஆத்திரமடைந்த தாய் பெற்ற மகள் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.
women arrested
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.