சம்பாரிச்ச மொத்தமும் போச்சு.. நடுத்தெருவில் நின்றேன்.. காரணம் சொந்த அப்பா - மனம் திறந்த நடிகை நீலிமா!
Actress Neelima Rani : நடிகர் திலகம் மற்றும் உலகநாயகன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி கண்ட தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் நீலிமா ராணி.
Neelima Rani
சுமார் 31 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடிகையாக பயணித்து வரும் நீலிமா ரவி பல திரைப்படங்களில் தங்கையாக, அக்காவாக, நாயகியின் தோழியாக நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பிரபல நடிகர் ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர், நடிகைகள் என்றாலே லட்சத்தில், கோடிகளில் சம்பளம் பெறுபவர்கள். ஆகவே அவர்களுடைய வாழ்க்கை மிகப்பெரிய சொகுசான வாழ்க்கை என்று நம்மில் பலருக்கு உள்ள அந்த ஒரு பிம்பத்தை உடைப்பது போல அமைந்து இருந்தது அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு நீலிமா ராணி அளித்திருந்த ஒரு பேட்டி.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hh1313ejnbt6yztzwbkt3mam/neelima_300x300xt.jpg)
Neelima
அவர் அந்த பேட்டியில் பேசிய பொழுது நான் தமிழக மக்களை பொறுத்தவரை ஒரு நல்ல நடிகையாக திகழ்ந்து வருகிறேன். ஆனால் என் குடும்பத்தை பொறுத்தவரை நான் ஒரு "தங்க முட்டையிடும் வாத்து" அவ்வளவுதான். என் குடும்ப சூழல் காரணமாகத் தான் சினிமாவில் நடிக்க சென்றேன், தம்பியின் படிப்பு, குடும்ப செலவு என்று என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நகர்ந்தது. ஆகா குடும்பத்தை பாரத்தை நாம் தான் சுமக்கிறோம் என்று 18 வயது வரை அது எனக்கு ஒரு பெருமையாக இருந்தது.
எனக்கு திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுது மாதத்திற்கு லட்சத்திற்கும் மேல் சம்பளத்தை பெற்று வந்தேன். பல குறுகிய காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும் பணம் சேர்த்தேன்.
ஆனால் என் தந்தைக்கு இருந்த ஒரு கெட்ட பழக்கத்தின் காரணமாக என் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது.
Actress neelima
பல லட்சங்களை சம்பாதித்த நான் பல வருடங்கள் கழித்து என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த பொழுது நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்கிறேன் என்பது தெரியவந்தது. என் தந்தைக்கு சூதாட்டத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு, அதன் காரணமாக நான் கஷ்டப்பட்டு உழைத்த மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் விட்டு, இறுதியில் அந்த சூதாட்டமே அவரை உயிரை எடுத்துக் கொண்டது. கையில் பணம் இல்லை, கடனுக்கு மேல் கடன், செய்வதற்காக தாயோடு நடுத்தெருவில் நின்றேன்.
வாடகை வீட்டில் குடிபுகுந்தேன், மீண்டும் வைராக்கியத்தோடு உழைக்க துவங்கினேன். இன்று அந்த வாடகை வீட்டையே வாங்கும் அளவிற்கு மீண்டும் உயரத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு வெளியில் இருந்து எப்பொழுதும் எந்த கஷ்டங்களும் வந்ததில்லை. 31 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து வரும் எனக்கு என் குடும்பமே எதிரிகளாக மாறியது வேதனை அளிக்கிறது என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.