ஷாக்கிங் நியூஸ்.. பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5 பேர் கைது..!
தஞ்சாவூரில் காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
thanjavur crime news
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் அபினேஷ் (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பள்ளி மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடமான தென்னந்தோப்புக்கு காதலன் அபினேஷ் அழைத்து சென்றுள்ளார்.
School Student Gang Rape
அப்போது அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் காதலன் அபினேஷின் நண்பர்களான பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), ஸ்ரீதரன்(24), திருவாரூரை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 3 பேர் சென்றனர். பின்னர் காதலன் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கததறியும் விடாமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
police complaint
பின்னர் இந்த வீடியோவை அவரது நண்பரான பூண்டியை சேர்ந்த ராகுல்(எ) குட்டி(24) என்பவரது செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ராகுல், மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் 1098க்கு வந்த தகவலின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
Posco Act
அதன் பேரில் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் (எ) குட்டி ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.