Uma Ramanan : நிழல்கள் முதல் திருப்பாச்சி வரை - பாடகி உமா ரமணன் குரலில் சூப்பர் ஹிட்டான டாப் 5 பாடல்கள்!
Singer Uma Ramanan : தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்த பிரபல பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார், அவருக்கு வயது 69.
AV Ramanan
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சப்த ஸ்வரங்கள்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் தான் ஏ.வி. ரமணன். 90களில் பிறந்த அனைத்து நபர்களுக்கும் இவர் மிக பரிட்சயம். இவருடைய மனைவி தான் பிரபல பாடகி உமா ரமணன். தமிழ் திரையுலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல சிறந்த பாடல்களை இவர் பாடியுள்ளார்.
"ஏன் இவ்வளவு வன்மம்.." விஜய்யின் கில்லி பட போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் கைது..
Poongathave Thal Thiravai
கடந்த 1980 ஆம் ஆண்டு இளையராஜாவின் இசையில் உருவான நிழல்கள் என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் தான் உமா ரமணன். நிழல்கள் திரைப்படத்தில் மெகா ஹிட்டான "பூங்கதவே தாழ் திறவாய்" என்கின்ற பாடலை பாடியது இவர் தான். எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா என்று தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து இவர் பாடல்களை பாடி இருக்கிறார்.
ilayaraja
1981 ஆம் ஆண்டு மீண்டும் இளையராஜா இசையில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்கின்ற திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" என்கின்ற பாடலை பாடியதும் இவர் தான். அதேபோல 1982ம் ஆண்டு மீண்டும் இளையராஜா இசையில் உருவான தூரல் நின்னு போச்சு என்கின்ற திரைப்படத்தில் வரும் "பூபாலம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்" என்கின்ற பாடலை பாடியதும் உமா ரமணன் தான்.
Yesudas
புதுமைப் பெண் என்கின்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் கே.ஜே ஏசுதாஸ் குரலில் மெகா ஹிட்டான "கஸ்தூரி மானே" என்கின்ற பாடலில் அவரோடு இணைந்து அப்பாடலை பாடியிருக்கிறார் உமா ரமணன். அதேபோல அரங்கேற்ற வேளை என்கின்ற திரைப்படத்தில் கே.ஜே ஏசுதாஸ் குரலில் ஒலித்த "ஆகாய வெண்ணிலாவே" என்கின்ற பாடலை அவரோடு இணைந்து பாடி இருக்கிறார் உமா ரமணன்.
கேளடி கண்மணி திரைப்படத்தில் வரும் "நீ பாதி நான் பாதி" என்கின்ற பாடலை பாடியதும் உமா ரமணன் தான். தமிழ் திரை உலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல மிக சிறந்த பாடல்களை பாடிய உமா ரமணன் கடந்த 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி மற்றும் திருப்பாச்சி ஆகிய இரு திரைப்படங்களிலும் பாடல்களை பாடி இருக்கிறார்.
Singer Uma
சிவகாசி படத்தில் வரும் "இது என்ன இது என்ன புது மயக்கம்" என்கின்ற பாடலையும், திருப்பாச்சி படத்தில் வரும் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" என்கின்ற பாடலையும் பாடியது உமா ரமணன் தான். கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், நேற்று மேல் 1ம் தேதி புதன்கிழமை இரவு தனது 69வது வயதில் காலமானார்.