தமிழ் மக்களே ரெடியா? கோலிவுட் உலகில் இயக்குனராக களமிறங்கும் அனுராக் காஷ்யப் - ஹீரோ யார் தெரியுமா?
Anurag Kashyap in Kollywood : கதாசிரியராக தனது பயணத்தை ஹிந்தி மொழியில் துவங்கி இன்று மிகப்பெரிய இயக்குனராக பாலிவுட் உலகில் கொடி கட்டி பறந்து வரும் இயக்குனர் தான் அனுராக் காஷ்யப். தற்போது இவர் தமிழ் மொழியிலும் இயக்குனராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Immaika Nodikal
கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பாலிவுட் உலகில் பயணித்து வந்திருந்தாலும், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான "பிளாக் ஃப்ரைடே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் பாலிவுட் உலகில் களம் இறங்கியவர் தான் அனுராக்.
தமிழ் மொழியில் கடந்த 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான "இமைக்கா நொடிகள்" திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர், இவ்வாண்டு வெளியான தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leo Movie
பாலிவுட் இயக்குனர் என்றாலும் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அவர், தமிழ் மொழியில் தனது முதல் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பான் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில், பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக குறிப்பிடுகிறது.
GV Prakash kumar
அண்மையில் ஒரு பேட்டியில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்னதாக அவருடைய இந்தி படம் ஒன்றுக்கு பின்னணி இசை பணிக்காக அவருடன் பணியாற்றியுள்ளதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.