விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றான, 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வாரமும், எத்தனையோ படங்கள் வெளியாகி வந்தாலும், தினம் தோறும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்ல தரசிகளை கடந்து இளம் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துள்ளது.
அந்த வகையில் 'ஈரமான ரோஜாவே' முதல் சீசன் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம், 'ஈரமான ரோஜாவே 2' தொடர், 2022- ஜனவரி மாதம் முதல் துவங்கியது. இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்த இந்த தொடரின் இரண்டாம் பாகம்... இரண்டு கதாநாயகன் - இரண்டு கதாநாயகிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தம்பியை விரும்பும் காவியாவை (கேப்ரியல்லா) அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார். அதே போல் தங்கையை விருப்பிய ஜீவாவை (திரவியம்) அக்கா திருமணம் செய்து கொள்ள, இதனால் இந்த இரண்டு ஜோடிகள் இடையிலும் எப்படி பட்ட பிரச்சனைகள் வருகிறது , அதை கடந்து அவர்கள் வாழ்க்கையில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலை இயக்கி வந்த தாய் செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவருக்கு பதில் ராஜா சுந்தரம் என்பவர் இந்த சீரியலை இயக்கி வந்தார்.இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த சீரியலில் இருந்து... ராஜா சுந்தரம் விலகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்ததாக இந்த சீரியலை யார் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தகவல் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்களை மட்டும் இன்றி, ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.