கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
Madurai News
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தை சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மனைவி மலர்விழி (27). இந்த தம்பதிக்கு கயல்விழி (7) மற்றும் கார்த்திகா (5) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமயமுத்து துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலர்செல்வி தனது 5 வயது இளைய மகளை காணவில்லை என மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hymr745g3117rq54keekv11n/madurai-2_300x169xt.jpg)
Child Murder
இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள வயல்வெளி கிணற்றில் சிறுமியின் கார்த்திகா உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
chennai police
இந்நிலையில், தாய் மலர்விழி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் பாணியில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
illegal love
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்: கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மலர்விழிக்கு அப்பகுதியை சேர்ந்த பாஸ்கரன், தர்மசுந்தர் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். சம்பவத்தன்று மலர்செல்வி தனது வீட்டில் கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது விளையாடி விட்டு வீட்டுக்கு சென்ற சிறுமி கார்த்திகா இதனை பார்த்துள்ளார்.
Mother Arrest
இதுதொடர்பாக மகள் கணவரிடம் சொல்லி விடுவாலோ என பயந்து கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர், விளையாட சென்ற சிறுமி காணாமல் போய் விட்டதாக கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தேடுவது போல நாடகமாயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காது தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.