மனைவி மீதுள்ள காதலை சொல்ல... சாமி பட பாடலில் நா.முத்துகுமாருக்கே அல்வா கொடுத்து 2 வரிகளை சொருகிய இயக்குனர் ஹரி
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் இடம்பெறும் திருநெல்வேலி அல்வா டா பாடலில் இயக்குனர் ஹரி செய்த கோல்மால் வேலையை பற்றி பார்க்கலாம்.
Preetha, Hari, Na Muthukumar
ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் சாமி. சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இயக்குனர் ஹரியின் கெரியரில் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக சாமி அமைந்திருந்தது. இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் பாடல்கள் தான். அப்பட பாடல்கள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்படும் அளவுக்கு செம்ம ஹிட் அடித்தன.
சாமி படத்தில் இடம்பெற்ற பாடல்களை நா.முத்துக்குமார் தான் எழுதி இருந்தார். நா.முத்துக்குமாரின் பாடல்கள் என்றாலே அதில் டீடெயிலிங் நிச்சயமாக இருக்கும். அதிலும் சாமி படத்தின் ஓப்பனிங் சாங் ஆன திருநெல்வேலி அல்வா டா பாடலில் ஒவ்வொரு வரிகளையும் அலசி ஆராய்ந்து எழுதி இருப்பார். உதாரணத்திற்கு அப்பாடலில், ‘பாளையங்கோட்டையில் ஜெயிலு பக்கம் ரயிலு கூவும்’ என்கிற வரியும் இடம்பெற்று இருக்கும்.
tirunelveli alva da song secret
இந்த வரி கேட்பதற்கு கோர்வையாக இருந்தாலும், உண்மையிலேயே பாளையங்கோட்டை ஜெயில் அருகே ரயில் பாதை உள்ளது. அங்கு கடந்து செல்லும்போது ரயில் ஒலி எழுப்புவதை குறிக்கும் விதமாக தான் அந்த வரிகளை அவர் அப்பாடலில் பயன்படுத்தி இருப்பார். இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கே தெரியவந்தது. நெட்டிசன் ஒருவர் பாளையங்கோட்டை ஜெயில் அருகே எடுத்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்து வியந்துபோன ஹாரிஸ், அதை தன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து சிலாகித்து பேசி இருந்தார்.
இதையும் படியுங்கள்... அடக்கொடுமையே... இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!
Saamy Movie
இப்படி ஒவ்வொரு வரிக்காக மெனக்கிடும் நா.முத்துக்குமாருக்கே சாமி பட இயக்குனர் அல்வா கொடுத்துள்ள சம்பவமும் திருநெல்வேலி அல்வாடா பாடலில் அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால், அப்பாடலில், ‘நாட்டுச் சாலை சக்கரை என்ன செக்கு போல சுத்துற’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். இந்த வரியை மட்டும் இயக்குனர் ஹரி எழுதினாராம்.
இந்த வரி நன்றாக இருக்கிறது. இருந்தாலும், நாட்டுச் சாலை எங்க இருக்குனு நா.முத்துக்குமார் கேட்க, இயக்குனர் ஹரியோ, அது முக்கியமான ஊருங்க, அங்க தான் சக்கரை ஆலை இருக்குனு பொய் சொல்லிவிட்டாராம். முத்துக்குமாரும் அதை உண்மை என நம்பி சரி இருக்கட்டும் என சொல்லிவிட்டாராம். பின்னர் ஹாரிஸ் ஜெயராஜும் நாட்டுச்சாலையா நான் கேள்விப்பட்டதே இல்லையே என இதுபற்றி ஹரியிடம் கேட்டிருக்கிறார்.
Preetha Hari
உடனே ஹரி, நாட்டுச்சாலைல தான் மிகப்பெரிய சக்கரை ஆலை இருக்கிறது என்று சொல்ல, அதற்கு ஹாரிஸும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் உண்மையில் நாட்டுச்சாலை என்பது இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தாவின் சொந்த ஊராம். தன் மனைவியை இம்பிரஸ் பண்ணுவதற்காக அந்த வரியை எப்படியாவது படத்தில் வைக்க வேண்டும் என முடிவெடுத்து நா.முத்துக்குமார் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு அல்வா கொடுத்து அந்த வரியை சேர்த்திருக்கிறார் ஹரி.
இதையும் படியுங்கள்... விஜய்க்கு வில்லன்.. ராக்கி பாய்க்கு வில்லன்.. ரூ.295 கோடி சொத்துக்கு அதிபதி இந்த நடிகரா..