Dhanush: தனுஷின் கேப்டன் மில்லர் கதை..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க...ஓப்பனாக போட்டுடைத்த இயக்குநர்...
Captain-miller Story: தனுஷ் நடிக்கவுள்ள கேப்டன் மில்லர் படம் பற்றி, பல வதந்திகள் பரவி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
dhanush
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்று, பாலிவுட் போன்ற படங்களிலும் நடித்து பான் இந்திய நடிகராக திகழ்பவர்கள்.
dhanush
இவர், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர்.
dhanush
இதையடுத்து, இருவரும் அவரவர் பணிகளில் பிஸியான இருந்து வருகிறார்கள். தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க விருக்கிறார். இந்த படத்தின் கதை பற்றி சமீப காலமாகவே வதந்திகள் பரவி வருகிறது.
dhanush
குறிப்பாக, கேப்டன் மில்லர் கதை இலங்கை எல்டிடிஇ இயக்கத்தை சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவரின் வாழ்க்கை வரலாற்று படம் தான் என்று கூறி வருகின்றனர். இந்த வதந்திகளுக்கு இயக்குநர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளர்.
dhanush
அருண் மாதேஸ்வரன், கடந்த் 2021 ம் ஆண்டு ராக்கி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். இதையடுத்து, தனது தனது இரண்டாவது படத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவனுடன் கை கோர்த்துள்ளர்.
dhanush
செல்வராகவன் இந்த படத்தில் முதல் முறையாக இயக்குநராக நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் ஓடிடி யில் இந்த மாதம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
dhanush
இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ''இந்த படம் இலங்கை எல்டிடிஇ இயக்கத்தை சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் இல்லை.
இது முற்றிலும் மாறுபட்ட கதை'' என்று கூறியுள்ளார். மேலும், இந்த கேப்டன் மில்லர் படத்தில் குத்துப்பாட்டே இருக்காது. இது ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாகும். என் முந்தைய இரண்டு படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் என்றார்.
dhanush
மேலும், ரசிகர்களுக்கு பிடிக்கும் வைகையில், இதை பெரிய பட்ஜெட் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.