விடுதலை பாடல் ரெக்கார்டிங்கில் இளையராஜா சொன்ன வார்த்தை? ஓரமாக நின்ற தந்தையின் முகம்.. தனுஷ் பகிர்ந்த தகவல்!
நடிகர் தனுஷ்.. இளையராஜா பயோ பிக் பட பூஜையில் இசையராஜா இசையில் பாடிய அனுபவம் மற்றும் தன்னுடைய தந்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.
நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பூஜை இன்று போடப்பட்டநிலையில், இதில் இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவே இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றும் இப்படத்தில் கலை இயக்குனராக முத்துராஜ் பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இளையராஜா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் கையில் ஹார்மோனிய பெட்டியுடன் இளையராஜா முதன்முதலில் சென்னைக்கு வந்திறங்கியதை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ்... இளையராஜா பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது, விடுதலை படத்தின் பாடல் ரெக்கார்டிங்கில் கலந்து கொள்ள சென்றபோது நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்.. "ஏற்கனவே சொன்ன இன்சிடென்ட் தான் இது, இருந்தாலும் நான் திரும்பவும் சொல்கிறேன் என கூறி... விடுதலை படத்திற்கான பாடல் ரெக்கார்ட் பண்ண சென்ற பொது, சார் என்ன போய் பாடு என்று கூறினார். உடனே நான்... சார் நீங்க இங்கதான் இருப்பீங்களா என்று கேட்டேன்? ஆதற்கு அவர்... நான் என்னைக்கு உன் கூட இல்லை என்று கேட்டார். எங்க அம்மா வயிற்றில் நான் இருக்கும் போதில் இருந்தே, நீங்க என் கூட தான் இருக்கீங்க என்று சொன்னேன். இப்பவும் அதுதான் உண்மை அவர் எப்போதும் என்கூட தான் இருப்பார். இருந்து வருகிறார் என தெரிவித்தார்.
Dhanush
நிறைய விஷயங்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நமக்கு முன்னாடி நிறைய பேர் பேசிடுவதால் நாம யோசிச்சிட்டு வந்த பாயிண்ட்ஸ் நிறைய போயிடுது. வெற்றி சில விஷயங்களை அப்படியே போற போக்கில் அடிச்சிட்டாரு. இந்த வாய்ப்பு, ஒரு ஆர்டிஸ்டா இது எனக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா தான் நான் நினைக்கிறேன். இப்படத்தில் நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். அதுவும் அந்த அழைப்பு இளையராஜா சார்கிட்ட இருந்தே எனக்கு வந்தது... இன்னும் அதிக சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இசையாகவே, இசைஞானியாகவே... இசையின் கடவுளாகவே நடிக்கும் வாய்ப்பை அந்த சிவன் எனக்கு கொடுத்துள்ளதை நினைத்து நெகிழ்ச்சி அடைகிறேன். இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கும் கமல் சார், அவருக்கு இசை மீதும். இசைஞானி மீதும்.. இருக்கும் காதலை நான் பார்த்தேன் ரொம்ப நன்றி சார்.
Dhanush
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு படைப்பில் நான் இருக்கிறேன் என்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு பிரஷர் ஆகவோ அல்லது சேலஞ்சாகவோ நினைக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் நான் இவரை மட்டுமே பற்றி பேச நினைக்கிறேன். இப்போதைக்கு ஏனோ தெரியவில்லை, 'குயில் பாட்டு' என்கிற பாடலை ரெக்கார்ட் செய்யும் போது, ஒரு ஓரமாக நின்று... பார்த்துக் கொண்டிருந்த என் தந்தையின் ஞாபகம் தான் இங்கு முழுவதும் எனக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது. இங்கிருந்து செல்லும்போது இதனை அவருக்கு போன் செய்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இன்னும் பேச நிறைய இருக்கிறது எனினும் இதோடு முடித்துக் கொள்கிறேன் என விடைபெற்றார்.