பகலில் போட்டு தாக்கும் வெயில்.. 13,14 தேதிகளில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்.!
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu snowfall
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து கடும் பனி பொழிவும் குளிரும் நிலவி வருகிறது. அதே நேரத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01cs1mwfa6rc27yprkt4ff4c89/tamilnadu-rain-3_300x169xt.jpg)
Meteorological Centre
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
tamilnadu rain
வரும் 13, 14ம் தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Chennai snowfall
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலைவேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32- 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.