போதையில் காரை ஏத்தி இரண்டு பேரை கொன்றவனுக்கு பெயிலு! எனக்கு ஜெயிலா? வேண்டுமென்றே பொய் வழக்கு! டிடிஎஃப் வாசன்!
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கைதான டி.டி.எஃப். வாசன் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உணவு இடைவேளைக்குப்பின் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
TTF Vasan Arrest
யூடியூபர் மற்றும் பைக் ரேஸரான டி.டி.எஃப். வாசன் வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்நிலையில் டி.டி.எஃப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாகவும், கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக ஓட்டியதை அடுத்து டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01gnbf5w7kn0vef7sppy295gr1/312496624-120263094206758-145227533837178349-n_300x300xt.jpg)
TTF Vasan
பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
Youtuber TTF Vasan
அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎப் வாசன்: நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன். தன் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில் எனக்கு வழக்கா ? சட்டம் என்பது எல்லோருக்குமானது தான்.ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bike Racer TTF Vasan
நான் நீதித்துறையை நம்பியுள்ளேன். எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும் என முழக்கமிட்டார். இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? எனவும் வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா எனவும் முழக்கமிட்டபடி சென்றார். தற்போது நீதிமன்றத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை சாப்பிடுவதற்காக காவலரில் வாகனத்தில் அழைத்துச் சென்றார். டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு விசாரணையை உணவு இடைவேளைக்குப்பின் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.