Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மலர் பஜார்:
ரத்தன் பஜார், என்எஸ்சி போஸ் சாலை, மின்ட் தெரு, பெத்து நாயகன் தெரு, ஈவிஆர் சாலை, பார்க் டவுன் - ஐசக் தெரு, வால் டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, எஸ்பிளனேட் - மலையபெருமாள் தெரு, பிராட்வே மற்றும் ஆண்டர்சன் தெரு.
தண்டையார்பேட்டை:
நேதாஜி நகர், நேரு நகர், பேசின் ரோடு, பர்மா காலனி, எழில் நகர், மணலி சாலை, மீனாம்பாள் நகர், விஓசி நகர், காமராஜ் நகர் மற்றும் நியூ சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.