சென்னையில் மட்டுமல்ல.. மழை காரணமாக இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ !!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
School Leave
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
TN Rains
அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Chennai Rains
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்திலும், அதன் பிராந்தியங்களான காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் டிசம்பர் 4 ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..