குடும்பத்தை கழட்டி விட்டுட்டு... கோடைக்கு இதமாக ஏற்காடு சென்று கும்மாளம் போடும் 5 ஹீரோக்கள்! வைரல் போட்டோஸ்!
இளம் நடிகர்கள் 5 பேர் ஒன்று கூடி, ஏற்காடுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ள நிலையில், அங்கு எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குடும்பத்துடன் பல இடங்களுக்கு சென்றாலும், நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது... இருக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. பலர் தங்களுடைய பள்ளி காலங்களில், கல்லூரி காலங்களில், நண்பர்களுடன் டூர் சென்றதை எண்ணி, மீண்டும் அந்த காலங்கள் வராதா என ஏங்குவது உண்டு.
வெளிநாடு மற்றும் சிட்டிகளில் வாழும் இளைஞர்கள் பலர்... சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை விட, நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை பார்த்திருப்போம். காரணம் நட்பு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டது. நல்லது... கெட்டது என எதையும் பாகுபாடு இன்று, வெளிப்படையாக நண்பர்களிடம் மட்டுமே பேசமுடியும்.
இப்படிப்பட்ட நட்புக்கு பிரபலங்கள் மட்டும் விதி விலக்கா என்ன? நேரம் கிடைக்கும் போதெல்லாம்... பார்ட்டி, பப் போன்ற இடங்களில் பிரபலங்கள் தங்களின் நண்பர்களை பார்த்தாலும், ஒன்று கூடி வெளியூருக்கு டூர் செல்வதில் சந்தோசம் இருக்க தானே செய்யும்.
அப்படி தான், தற்போது 5 பிரபலங்கள் ஒன்று கூடி ஏற்காடு சென்று தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள். நடிகர் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களுடன்.... டிடியின் முன்னாள் கணவரும் உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.