ரோட்டு கடையில் டீ குடிக்கிறீங்களா..? கவனமாக இருங்கள்..ஆபத்து உங்களைப் பின் தொடரும்!
பொதுவாகவே சாலையோர டீக்கடைகளில் பேப்பர் கப்பில் தான் டீ வழங்கப்படும். ஆனால் இந்த கப்பில் டீ குடித்தால் உடலுக்கு அபாயகரமான தீங்கை விளைவிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டீயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருப்பதில் டீயின் பங்கு குறையாது. அதுபோல் டீ அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சாலையோரக் கடைகளில் டீயை ரொம்பவே ரசித்து குடிப்பார்கள். அங்கு வழங்கப்படும் டீ பொதுவாக பேப்பர் கப் ஆகும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hjg8y43v3vmesbz7jzg4n4t6/plastic-cup-2_300x171xt.jpg)
இந்த வகையான கப்புகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. டீ குடித்த உடன் அதனை குப்பைத் தொட்டியில் போடலாம். சில சமயங்களில் இந்த மாதிரி கப்புகளை நாம் வீட்டிலும் பயன்படுத்துகிறோம். உண்மையில், இந்த வகையான கப் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நிபுணர்களின் கூற்று படி, இவை உடலுக்கு என்ன வகையான தீங்கு விளைவிக்கும்? என்று இங்கு காணலாம்.
பேப்பர் கப்புகளில் பிஸ்பெனால் என்ற பெட்ரோலியம் சார்ந்த வேதிப்பொருள் உள்ளது. இவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இத்தகைய கப்புகளில் டீ குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். நோய்த்தொற்றை உண்டாக்கும் கிருமிகளும் இதில் உள்ளன.
இந்த கப்புகளில் பயன்படுத்தப்படும் பூச்சுகளில் இந்த தீங்கு விளைவிக்கும் பிஸ்பெனால்கள், பெட்ரோலியம் சார்ந்த இரசாயனங்கள் உள்ளன. மேலும் நாம் டீ குடிக்கும்போது அது நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது.
தினமும் ஒரு பேப்பர் கப்பில் டீ குடிப்பதால் உடலில் பிபிஏ அதிகரிக்கிறது. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உடலில் பிபிஏ அளவு அதிகரித்தால், புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது.