கிட்னி கிடைச்சும் பலன் இல்லை... போண்டா மணி மரணத்தின் அதிர்ச்சி பின்னணி! பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்!
சிறுநீரகப் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நடிகர் போண்டாமணியின் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில், கடந்த 1991 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான, பாக்கியராஜ் நடிப்பில் வெளியான 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இலங்கை அகதியான போண்டாமணி. இவருடைய நடிப்பு, மேனரிசம், போன்றவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரீச்சான நிலையில்... அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Bonda Mani
மேலும் பல மேடை நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதை போல் விஜய், அஜித், முரளி, தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான போண்டா மணி, தன்னை போல் வாய்ப்பு தேடி சென்னை வரும் பலருக்கு நாடகங்களிலும், திரைப்படங்களிலும், நடிக்க வாய்ப்பை பெற்றுக் கொடுத்தவர்.
Bonda Mani
இவருக்கு கடந்த கடந்தாண்டு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள அவருடைய வீட்டில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
Bonda Mani
இதை தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதில் நடிகர்கள் செந்தில், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சிக்சர் மனோகர், முத்துக்காளை, பெஞ்சமின், அம்பானி சங்கர், பாவா லட்சுமணன், இமான் அண்ணாச்சி, மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், காதல் சுகுமார், உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bayilvan Ranganathan
இந்நிலையில் போண்டாமணியின் மரணம் குறித்து youtube தளத்தில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் அவருடைய மரணத்தின் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போண்டா மணி தன்னுடைய நண்பர் என்றும், இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவருக்கு இப்போது வரை பாஸ்போர்ட் இல்லை. இலங்கையில் பிறந்திருந்தாலும், இவர் தமிழ் மீது தீராத பற்று கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
bonda mani
ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பாக இயங்கி வந்த போண்டா மணிக்கு, பணத்தை சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு சேர்த்து வைக்க தெரியவில்லை. அவர் இல்லாத நிலையில் இவரின் குடும்பத்தினர் நிலை என்ன என்பது தெரியவில்லை... என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ள பயில்வான் ரங்கநாதன், போண்டாமணிக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
bonda mani
மேலும் கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் போண்டா மணிக்கு செயல் இழந்த நிலையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருந்தார். இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு முறை கிட்னி கிடைத்தும், அந்த கிட்னி அவருக்கு பொருந்தாதலால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் போனது. இதனால் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை அவருக்கு இருந்தது.
போண்டாமணி இறந்த அன்று, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். கையில் பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். ஆனால் அதற்குள் அவரின் உயிர் பிரிந்துள்ளது என கண் கலங்கியபடி இந்த தகவலை கூறியுள்ளார்.