பாலிவுட் இயக்குனர்களால கூட செய்யமுடியாததை சாதிச்சிருக்கான்... அவன கொண்டாடனும் - நண்பன் அட்லீ பற்றி SK உருக்கம்
அட்லீயை எல்லாரும் ஈஸியா விமர்சனம் செய்வதாகவும், அவருடைய வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. 7 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் இப்படம் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அயலான் படத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் நடிகர் சிவகார்த்திகேயன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்த வண்ணம் உள்ளார். அந்த வகையில் ஒரு பேட்டியில் தன்னுடைய நண்பன் அட்லீ பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார் எஸ்.கே. அதில் அட்லீ பாலிவுட் சென்று 1200 கோடி வசூல் செய்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தும் அவரை நாம் கொண்டாடவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.கே.
அதன்படி அவர் கூறியதாவது : “ஜவான் டிரைலர் பார்த்ததும் நான் அட்லீக்கு மெசேஜ் அனுப்பினேன். தம்பி இனிமே நீ இந்தபக்கம் வர முடியாது. உன்னை அங்க தூக்கி கொண்டாடிருவாங்க. இந்தப்படம் அவங்களுக்கு பயங்கர புதுசு. பிரம்மாண்ட வெற்றிபெறும் நீ வெயிட் பண்ணி பாருனு சொன்னேன். இது டைனோசர்டானு அவன்கிட்ட சொன்னேன். அந்த அளவிலான வெற்றியை அவன் எட்டிப்பிடித்திருக்கிறான்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் புது அப்பா - மகள் காம்போ... சீமானின் மகளாக நடிக்கும் நயன்தாரா! அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
அட்லீயை நிறைய பேர் ஒரு பக்கம் விமர்சிக்கிறாங்க. மற்ற திரையுலகில் அட்லீ மாதிரி ஒரு டைரக்டர் இதுபோன்று சாதித்தால் அவர்களெல்லாம் கொண்டாடுறாங்க. அதை நாமலும் பண்ணனும்னு தோணுது. ஒருத்தர் தமிழ்ல இருந்துபோய் ஷாருக்கானை வச்சு, 1200 கோடி வசூல் பண்றதுலாம் சும்மா விளையாட்டு கிடையாது. நீங்க அந்த கதை ஏற்கனவே வந்திருக்கு வரலனு என்னவேண்டுமானாலும் சொல்லலாம். இந்தி திரையுலகில் இருக்கும் இயக்குனர்களாலே அதை தொட முடியல. அதை இங்க இருந்துபோய் அவர் பண்ணிருக்காருன்னா அதை நாம செலிபிரேட் பண்ணனும்.
sivakarthikeyan
ஆடியன்ஸ் அட்லீ படம் பொழுதுபோக்கா இருக்கும்னு என்ஜாய் பண்றாங்க. ஒருசிலர் அவரை ரொம்ப விமசிக்கிறாங்க. இப்போ என்ன ஆகிடுச்சு, அட்லீ இங்க இருந்து பாலிவுட்டுக்கு போய்விட்டார். அதனால இங்க நமக்கான ஒரு கமர்ஷியல் டைரக்டர் இல்ல. அவனும் விஜய் சாரும் சேரும் போது அதனுடைய நம்பர்ஸ், மேஜிக், பிசினஸ் எல்லாமே வேறலெவல். அது மிஸ் ஆகுது” என எஸ்.கே கூறி உள்ளார். அட்லீயும், சிவகார்த்திகேயனும் முகப்புத்தகம் என்கிற குறும்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 'பிச்சைக்காரன்' பட ஹீரோயின்... சட்னா டைட்டசுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!