முத்தம் கொடுத்தது தப்பா.. திருமணத்தில் மணமகளுக்கு கிஸ் கொடுத்த மணமகன்.. தகராறில் முடிந்த சம்பவம்..
திருமணம் ஒன்றில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Wedding Ceremony
உத்தரபிரதேசத்தில் திங்கள்கிழமை நடந்த திருமணத்தின் போது மணமகன் தனது வருங்கால மனைவி மீது பாசத்தை வெளிப்படுத்தியதால், அவர்களது குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மணமகன் பாசத்தை முத்தத்தால் வெளிப்படுத்தியது மோதலுக்கு காரணமாக அமைந்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hyr3v8kxeakfe3z2hp57fn8a/asianet-news---2024-05-25t201321-540_300x169xt.jpg)
Uttar Pradesh
திருமண விழாவில் முத்தம் கொடுத்ததை அடுத்து மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் உறவினர்களை மேடையில் தாக்கியதால் ஹாபூரில் உள்ள அசோக் நகரில் உள்ள திருமண இடம் போர்க்களமாக மாறியது. மணமகனின் செயலால் ஆத்திரமடைந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Kiss
சிறிது நேரத்தில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மேடையில் தடியுடன் ஏறி மணமகனின் உறவினர்களை தாக்கினர். இந்த மோதலில் மணமகளின் தந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். போலீசார் வரவழைக்கப்பட்டு, இரு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
Kissing in Marriage
காயமடைந்தவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை இரு குடும்பத்தினரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.