கோடையில் முருங்கைகாய் தண்ணீர் குடிச்சா இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..? தெரிஞ்சா விடமாடீங்க!
கோடையில் முருங்கை காய் தண்ணீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அவற்றில் ஒன்று தான் முருங்கை காய். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hkj6v73kjg4ym9dk62yzs31a/fotojet--39-_300x171xt.jpg)
உங்களுக்கு தெரியுமா.. முருங்கை காய் நீர் தண்ணீரை குடித்தால், பல வழிகளில் பலன்களைப் பெறலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், கோடையில் முருங்கை நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: முருங்கை நீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காரணம், இதில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. குறிப்பாக, பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
சரும ஆரோக்கியத்திற்கு நல்லது: முருங்கை காயில் வைட்டமின் சி உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துவது மட்டுமின்றி, கோடையில் ஏற்படும் தோல் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மற்றும் சரும ஆரோக்கியமாக வைக்கும்.
இரத்த சோகைக்கு நல்லது: இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, நீங்கள் முருங்கை காய் தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் உடலில் இரும்பின் அளவு அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவுகிறது.
உடலை நீரேற்றமாக வைக்கும்: கோடையில் உடலை நீரேற்றமாக வைப்பது மிகவும் அவசியம். எனவே, இதற்கு நீங்கள் முருங்கை காய் தண்ணீர் குடிக்கலாம். இது உங்களை நீரேற்றமாக வைக்கும். மற்றும் வெப்ப தாக்கத்திலிருந்தும் உங்களை பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!
செரிமானம் ஆரோக்கியம்: முருங்கை காய் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். ஏனெனில் அதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நீர் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
இதையும் படிங்க: Health Tips: முருங்கை ஜூஸ் குடிங்க...இந்த அற்புத நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்..!!!
முருங்கை காய் நீர் தயாரிக்கும் முறை: 2 முருங்கைக்காயை நறுக்கி 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீரை பாதியாக வந்தவுடன் அதை குடிக்கவும். பின் முருங்கைக்காயை மென்று சாப்பிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D