ஷூட்டிங்கை முடிக்காமல் அஜர்பைஜானில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு - காரணம் என்ன?
அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது.
அங்கு சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வந்த படக்குழு கடந்த மாதம் சென்னை திரும்பியது. புத்தாண்டு கொண்டாட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு மீண்டும் அஜர்பைஜான் திரும்பிய படக்குழு, அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தது. ஆனால் தற்போது அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இசைஞானிக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... தோல்வியில் முடிந்த இளையராஜாவின் ஒரு தலைக்காதல்!
அஜர்பைஜானில் மோசமான வானிலை நிலவி வருவதால் ஷூட்டிங் தொடர்ந்து தடைபட்டு வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தயாரிப்பாளருக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு படக்குழுவின அனைவரும் சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள். எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளதாம். இதனால் ஷூட்டிங்கை விரைவில் முடித்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதன்காரணமாக இப்படத்தின் ஓடிடி உரிமை மட்டும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... லியோ படத்தை விமர்சித்து.... மேடையில் லோகேஷ் கனகராஜை டார் டாராக கிழித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்