பல முறை அழவைத்த செல்வராகவன்..! தனுஷ் காட்டிய அனுசரணை... நெருங்கி பழகியதை ஓப்பனாக உடைத்த சோனியா அகர்வால்!
நடிகை சோனியா அகர்வால் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரை பற்றியும், பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள தகவல் தற்போது, தீயாக பரவி வருகிறது.
தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான சோனியா அகர்வாலை தமிழில், 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வராகவன் தான். இந்த படத்தில் நடிக்கும் போது சோனியா அகர்வாலுக்கும் - செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காரணமாகவும், எதார்த்தமான நடிப்பை சோனியா அகர்வால் வெளிப்படுத்தியதாலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, போன்ற படங்களின் மூலம் அடுத்தடுத்து தன்னுடைய வெற்றியை பதிவு செய்து, முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அதே போல் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படங்களில் சோனியா நடித்து வந்ததாலும், இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்கள் வெளியான நிலையில்... ஒரு கட்டத்தில், இருவரும் தங்களின் காதலை வெளிப்படுத்தியோடு மட்டும் இன்றி திருமண அறிவிப்பையும் வெளியிட்டனர்.
ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!
selvaragavan - sonia agarwal
திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து விலகிய சோனியா அகர்வால்... மீண்டும் சீரியல்களில் தலை காட்ட துவங்கினார். அதே போல் சோனியா - செல்வராகவன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. இவர்களின் பிரிவுக்கு சோனியா அகர்வாலுக்கு இருக்கும் மது பழக்கம் தான் என கூறப்பட்ட நிலையில் திடீர் என, திருமணமான சில வருடத்திலேயே தங்களின் விவாகரத்தையும் அறிவித்தது இந்த ஜோடி.
selvaragavan - sonia agarwal
விவாகரத்து பெற்று 10 வருடங்கள் கழித்து, சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றதற்கான காரணத்தை முதல் முறையாக கூறினார் சோனியா அகர்வால். அதாவது திருமணத்திற்கு பின்னர் சோனியா அகர்வாலை செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட , சோனியா அகர்வால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், மன உளைச்சலில் இருந்து மீள்வதற்காக குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி அந்த சீரியலில் நடித்ததால், விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவனின் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் மற்றும் தனுஷ் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த போது... என் அம்மா
தனுஷின் தோற்றத்தை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா? என அவரை ஆச்சர்யத்தோடு கேள்வி எழுப்பினார். பின்னர் நான் கதைக்கு ஏற்றாப்போல் தான் இயக்குனர் ஹீரோவை தேர்வு செய்வார் என கூறி அவரை சமாதானம் செய்தேன்.
உண்மையில் சொல்லப்போனால் செல்வராகவனை விட தனுஷ் ரொம்ப நல்லவர் என்று தான் நான் கூறுவேன். படப்பிடிப்பின் போது காட்சிகள் சரியாக வரவில்லை என்றாலும், நாங்கள் சரியாக நடிக்கவில்லை என்றாலும் செல்வராகவன் மிகவும் மோசமாக எங்களை திட்டி அழவைத்து விடுவார். அந்த காட்சிகள் முடிந்தபிறகு சமாதானம் கூட செய்யமாட்டார்.
ஆனால் தனுஷ் மிகவும் அனுசரணையாக வந்து, அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என ஆறுதல் கூறுவார். எனவே பல நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் தான் பழகி உள்ளேன் என சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயவு செஞ்சி ஹெல்ப் பண்ணுங்க..! காரில் அமர்ந்தபடி பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ..!