சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் லட்சங்களில் சம்பாதிக்கும் நடிகை சிம்ரன்.. ஆனா கொஞ்சம் காஸ்ட்லி தான்..
நடிப்பு, தயாரிப்பு மட்டுமின்றி சிம்ரன் ஹோட்டல் பிசினஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
90-ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். 1997-ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ஜோடி, டைம், கண்ணுப்பட போகுதயா, பிரியமானவளே, 12பி, பம்மல் கே சம்மந்தம் கன்னத்தில் முத்தமிட்டாள், பஞ்ச தந்திரம் ரமணா என பல படங்களில் நடித்தார்.
1998 முதல் 2003 வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார். மும்பையில் இருந்து வந்த நடிகை என்றாலும் புடவை கட்டி, நெற்றியில் பொட்டு வைத்து, தலையில் பூ வைத்தால் அப்படியே தமிழ்நாட்டு பெண் போலவே மாறிவிடுவார்.
தனது இயல்பான நடிப்புக்காக பிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ஹீரோக்களுக்கு இணையாக நடனம் வெகு சில நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். இவரின் நடிப்பை தாண்டி, டான்ஸிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் சிம்ரன். அவரின் பல படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வாரணம் ஆயிரம் படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக மாறியது. இதனிடையே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிம்ரன் பங்கேற்ரார்.
Simran
ரியாலிட்டி ஷோ, கேம் ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தனது கணவருடன் சேர்ந்து சிம்ரன் தயாரித்திருந்தார். மேலும் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சீம ராஜா, பேட்ட, மகான் போன்ற படங்களிலும் நடித்தார். சிம்ரன் கடைசியாக ராக்கெட்ரி நம்பி விளைவு படத்திலும் நடித்தார். சிம்ரன் நடித்த துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
நடிப்பு, தயாரிப்பு மட்டுமின்றி சிம்ரன் ஹோட்டல் பிசினஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அக்கரை பகுதியின் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ள இந்த ஹோட்டலின் பெயர் கோட்கா. முதலில் துணி கடையாக இதனை தொடங்கிய சிம்ரன் பின்னர் நட்சத்திர ஹோட்டலாக மாற்றி உள்ளார்.
Simran
காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்கு மூடப்படும் இந்த ஹோட்டலில் 2 பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிளை புக் செய்ய ரூ.700 கட்டணம். மேலும் இந்த ஸ்டார் ஹோட்டலின் மெனு மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.300 என்ற விலையில் இருந்து ஆம்லெட் வகைகள் கிடைக்கிறது. இங்கு ஒரு காலிக் பிரெட்டின் விலை ரூ. 130 ஆகும். பேபி கார்ன் ரூ.280க்கும், சிக்கன் லாலிபாப் ரூ.280க்கும், நண்டு ஃபிரை ரூ.380க்கும் விற்கப்படுகிறது.
இந்த ஹோட்டலில் எல்லா சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ.1000 என்றும், அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை ரூ.1500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் வகைகள் ரூ.150-ல் இருந்து தொடங்குகிறது. சாக்லேட் பிரவுனி 280 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த ஹோட்டல் கிழக்கு கடற்கரை சாலை மெயின் ரோட்டில் இருப்பதால் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே சினிமா மட்டுமினிறி ஹோட்டல் மூலம் சிம்ரன் லட்சங்களில் சம்பாதிக்கிறார்.