Meena: ஹீரோ பத்தி பேசுறது இல்லை... ஹீரோயினா மட்டும் இப்படி? கீழ்த்தனமான வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்த மீனா!
நடிகை மீனா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் வதந்திக்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார்.
meena
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும், ஒரு சில நடிகர் - நடிகைகள் மட்டுமே ஹீரோ, ஹீரோயினாக தங்களுடைய வெற்றியை பதிவு செய்கின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தவர் மீனா.
meena
இடைத்தொடர் தன்னுடைய 15 வயதில், 1990-ஆம் ஆண்டு தெலுங்கில், 'நவயுகம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், அதே ஆண்டு 'ஒரு புதிய கதை' என்கிற படத்தில் அறிமுகமானாலும், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என் 'ராசாவின் மனசிலே' திரைப்படம் தான். இப்படத்தின் மூலம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மீனாவுக்கு, அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜயகாந்த், ரஜினி, கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், முரளி, கார்த்திக் போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, சிட்டிசன், வில்லன் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக, நடித்துள்ள மீனா விஜய் உடன் ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
தென்னிந்திய திருவிழாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மீனா, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் இடைவிடாது நடித்து வருகிறார். புதிய ஹூரோயின்ஸ் வருகையால் பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன வித்தியாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு நைனிகா என்கிற அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.
நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தன்னுடைய படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் மீனாவின் கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. பல முன்னணி நட்சத்திரங்கள் வித்யாசாகரின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கணவர் மறைவுக்கு பின்னர் மெல்ல.. மெல்ல.. அவருடைய நினைவில் இருந்து வெளியே வந்துள்ள மீனா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில் தற்போது தமிழில் 'ரவுடி பேபி 'என்கிற படத்திலும், மலையாளத்தில் 'ஆனந்தபுரம் டைரி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கணவர் மறைவுக்கு பின்னர் மீனா தனியாக வாழ்ந்து வருவதால், அடிக்கடி மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு மீனா நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து மீனா கூறுகையில், "ஒரு ஹீரோ தனியாக இருந்தால், அவரைப் பற்றி எந்த ஒரு அவதூறான வதந்திகளும் பரப்பப்படுவது இல்லை. அதுவே ஒரு ஹீரோயின் கணவரை இழந்து தனியாக இருந்தால் மட்டும் அவரைப் பற்றி இப்படி கீர்த்தனமாக பேசுகின்றனர். எத்தனையோ பேர் கணவரை இழந்து தனியாக உள்ளனர். பெண்களால் தனியாக வாழ முடியும். எனக்கு இரண்டாம் திருமணம் குறித்து எந்த ஒரு யோசனையும் கிடையாது. என்னுடைய முழு கவனமும் என் மகள் நைனிகா மீது தான் உள்ளது என மீனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீனா பற்றி பரவி வரும் தகவல்கள் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.