Poornima: கமல் கழுவிகழுவி.. ஊத்துனத்துக்கே இந்த அலப்பறையா? ஆளுயர மாலை... தெருவில் குத்தாட்டம் போட்ட பூர்ணிமா!
பூர்ணிமா ரவி, 16 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்கு மாலை அணிவித்து, ஆட்டம், பாட்டத்துடன் குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.
![After leaving Biggboss Poornima ravi family grand welcome mma After leaving Biggboss Poornima ravi family grand welcome mma](https://static-ai.asianetnews.com/images/01hkcv63nj7683rp593ky81v5z/mixcollage-05-jan-2024-06-26-pm-2825_363x203xt.jpg)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. பிக்பாஸ் வைத்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில், யாரும் எதிர்பாராத விதமாக விஷ்ணு வெற்றி பெற்று முதல் ஆளாக ஃபைனலுக்குள் நுழைந்தார். இதையடுத்து எஞ்சியுள்ள விசித்ரா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகிய 7 போட்டியாளர்கள் இடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, ஆசையை ஏற்படுத்தி வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார் பிக்பாஸ். விசித்ரா தான் பணப்பெட்டியுடன் வெளியேறினார் என சில தகவல்கள் வெளியான நிலையில்... தற்போது சுமார் 16 லட்சம் தொகையுடன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பூர்ணிமா. எப்படியும் பிக்பாஸ் ஃபைனலுக்குள் செல்ல மாட்டோம் என்பதை தெரிந்து கொண்டு பூர்ணிமா மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டுள்ளார் என்று ரசிகர்கள் சிலர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்... அவருடைய குடும்பத்தினர் பூர்ணிமாவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஆளுயர ரோஜா மாலை, தெருவில் புடவையை இழுத்து சொருகிக்கொண்டு குத்தாட்டம் என அலப்பறை செய்துள்ளார். கமலிடம் ஒவ்வொரு வாரமும் திட்டு வாங்கி கொண்டும்... பிக்பாஸ் ரசிகர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆளான பூர்ணிமாவுக்கே இப்படி ஒரு வரவேற்பா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.