- Home
- Cinema
- கருத்து
- The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
The Odyssey Movie Review : ஹாலிவுட்டின் ஜாம்பவன் இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள தி ஒடிஸி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

The Odyssey Movie Review
உலக சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படங்களில் தற்போது முதலிடத்தில் இருப்பது கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி (The Odyssey)'. ஒவ்வொரு படத்திலும் புதிய தொழில்நுட்பத்தையும், பிரம்மாண்டமான காட்சிகளையும் அறிமுகப்படுத்தும் நோலன், இந்த முறை உலக சினிமாவில் புதிய வரலாறு படைக்க தயாராகியுள்ளார். இந்தப் படம் முழுவதும் IMAX ஃபிலிம் கேமராக்களில் படமாக்கப்பட்ட உலகின் முதல் முழுநீள திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் முழுமையாக இந்த தொழில்நுட்பத்தில் உருவாகாத நிலையில், 'தி ஒடிஸி' புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த திரைப்படம், கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய உலகப் புகழ்பெற்ற 'ஒடிஸி' காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. நோலன் இயக்கும் 13-வது திரைப்படம் இதுவாகும்.
தி ஒடிஸி கதை என்ன?
கதையின் நாயகன் ஒடிசியஸ், கிரேக்கத்தின் இத்தாகா என்ற தீவை ஆட்சி செய்யும் மன்னன். ட்ரோஜன் போரில் தனது புத்திசாலித்தனமான 'ட்ரோஜன் ஹார்ஸ்' தந்திரத்தின் மூலம் கிரேக்க படைக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறார். ஆனால், போர் முடிந்த பிறகு தாயகத்திற்குத் திரும்பும் அவரது பயணம் எளிதாக அமையவில்லை. கடவுள்களின் கோபம், பயங்கரமான கடல் புயல்கள், மர்ம உயிரினங்கள் மற்றும் பல எதிர்பாராத ஆபத்துகள் ஒடிசியஸின் பயணத்தை சோதிக்கின்றன.
இதற்கிடையில், இத்தாகாவில் வேறு ஒரு பிரச்சினை உருவாகிறது. ஒடிசியஸின் மகன் டெலிமக்கஸ், தந்தை இன்னும் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே நேரத்தில், அரண்மனையை கைப்பற்ற நினைக்கும் பல பிரபுக்களும் இளவரசர்களும், ராணி பெனிலோப்பை மறுமணம் செய்ய வற்புறுத்தி, அரசாட்சியை கைப்பற்ற சதி செய்கின்றனர். இறுதியில் ஒடிசியஸ் தனது நாட்டிற்குத் திரும்புகிறாரா? தனது குடும்பத்தையும் ராஜியத்தையும் காப்பாற்றுகிறாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
தி ஒடிஸி விமர்சனம்
ஒடிஸியஸ் மன்னனாக மேட் டேமன் ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கிரேக்க வீரனுக்கே உரிய கம்பீரம், விடாமுயற்சி என அனைத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அவரது கதாபாத்திரம் நம்மை கதைக்குள் கட்டிப்போடுகிறது. அவரது மனைவி பெனிலோப் ஆக ஆன் ஹாத்வே, பல ஆண்டுகள் கணவனுக்காகக் காத்திருக்கும் ஒரு ராணியின் வலியையும், மன உறுதியையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். பெனிலோப்பின் காதலர்களில் ஒருவரான ஆண்டினோஸ் கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மேலும், லுபிடா நியாங்கோ, சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தால், எலியட் பேஜ், சமந்தா மார்டன், ஜான் லெகுய்ஸாமோ, பில் இர்வின், பென்னி சஃப்டி ஆகியோரின் சிறப்பான துணை நடிப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.
தி ஒடிஸி படம் எப்படி இருக்கு?
ட்ரோஜன் போருக்குப் பிறகு, தன் சொந்த ஊரான இதாக்காவிற்குத் திரும்ப ஒடிஸியஸ் போராடுகிறார். வழியில், கடல் கடவுளான பொசைடனின் மகனான சைக்ளோப்ஸ் பாலிபீமஸை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பு, அவரது தைரியம், புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதியைச் சோதிக்கும் பல ஆபத்தான சாகசங்களுக்கு வழிவகுக்கிறது. புராண உயிரினங்கள், கடுமையான போர்கள், உணர்ச்சிகரமான சந்திப்புகள் என அனைத்தும் படத்தில் நிறைந்துள்ளன. பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுக்கும், ஒடிஸியஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புக்கும் இடையே திரைக்கதை ஒரு சமநிலையை உருவாக்குகிறது. இதனால், இந்த பழங்கால காவியம் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் எளிதில் புரிகிறது.
தி ஒடிஸி படத்தின் ரிவ்யூ
சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன், அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அவரது இயக்கம், பிரமிக்க வைக்கும் விஷுவல்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் ஒன்றாக இணைக்கிறது. இதனால் 'தி ஒடிஸி' ஒரு வெறும் புராண ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், ஒரு முழுமையான அனுபவமாக மாறுகிறது. படத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவும், IMAX தொழில்நுட்பமும் திரையரங்கில் மறக்க முடியாத அனுபவத்தைத் தருகின்றன. ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. அதே சமயம், உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் ரசிகர்களைப் பயணத்தின் இறுதிவரை கட்டிப்போடுகிறது. இது நோலனின் சிறந்த படமா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், இது நிச்சயமாக அவரது மிகவும் லட்சிய மற்றும் பார்வைக்கு பிரமிப்பூட்டும் படைப்புகளில் ஒன்றாக நிற்கிறது.

