தீப்பிடித்து எறிந்த கார்! பக்கத்துக்கு வீட்டு காரருக்காக வரிந்து கட்டிய கீர்த்தி பாண்டியன்! ஷாக்கிங் ட்வீட்!
நடிகை கீர்த்தி பாண்டியன், தன்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்காரரின் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், இது குறித்து பொறுப்புடன் இருக்குமாறு எம் ஜி நிறுவனத்தை டேக் செய்து, போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
எகிறி கொண்டே செல்லும் விலை வாசிக்கு மத்தியில் நாளுக்கு நாள்... பெட்ரோல் மற்றும் டீசலில் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மக்கள் பலர் பேட்டரியால் ஓடும் வாகனங்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்திய சந்தையிலும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, எலக்ட்ரானிக் ரக டூவீலர் மற்றும் ஃபோர் வீலரை அறிமுகப்படுத்தி வருகிறது.
விதவிதமான மாடல்களில், விற்கப்படும் இது போன்ற எலக்ட்ரானிக் வாகனங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் எம் ஜி நிறுவனத்தை சேர்ந்த சொகுசு கார் ஒன்றை, கீர்த்தி பாண்டியன் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் வாங்கிய நிலையில், இந்த கார் தீப்பிடித்து எறிந்துள்ளது.
இது குறித்து சரவணகுமார் போட்டிருந்த பதிவில் "நான் mg zs ev கார் ஒன்றை கடந்த ஆறு வாரங்களுக்கு முன்பு, ரூபாய் 26.61 லட்சம் கொடுத்து வாங்கி இருந்தேன். இந்த காரை என்னுடைய வீட்டின் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த என் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், என் குடும்பத்தினரும் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறையினருக்கும், தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் 30 நிமிடத்தில் வந்து தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து MG நிறுவனத்திற்கு நான் தகவல் கொடுத்த போதிலும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என தன்னுடைய மன உளைச்சலை வெளிப்படுத்தி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சரவணகுமாரின் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள நடிகை கீர்த்தி பாண்டியன், "இது தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணக்குமார் என்பவரின் கார். அவர் வீட்டில் சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ளனர். இந்த எதிர்பாராத விபத்தின் போது வயதானவர்களோ.. சிறுவர்களோ... பக்கத்தில் இருந்தால் என்ன ஆவது? இது மிகவும் ஆபத்தான ஒன்று. எனவே அவரின் மின் அஞ்சலுக்கு பதில் சொல்லுங்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு எம் ஜி நிறுவனத்திடம் வரிந்து கட்டியுள்ளார். மேலும் இந்த கார் தீ பிடித்து எறிந்துள்ள சம்பவம் எம்.ஜி ரக கார் வைத்திருப்பவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.